உங்கள் அதிர்ஷ்ட நேரம்

Monday, July 12, 2010

செபி - பங்கு சந்தைகளைக் கண்காணிக்கும் நிறுவனம்.

பொதுமக்கள் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்காக முகவர்களின் உதவியை நாடினர். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வர்த்தகம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டவை தான் இன்று உலகிலுள்ள பங்குச் சந்தைகள்.

பங்குச் சந்தை - அன்றாடம் மில்லியன் கணக்கில் பணம் புழங்கும் இடம். ஆரம்ப காலத்தில் அங்கு நிறையத் தவறுகள் நடந்தன. அதையடுத்து விழித்துக் கொண்ட உலக நாடுகள் பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளைத் தோற்றுவித்தன.

முகவர்களாலேயே பங்குச் சந்தை நடத்தப்ட்ட போது அதன் நம்பகத் தன்மை பற்றிய கேள்வி எழுந்தது. தவறுகள் நடப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

அதனடிப்படையில் ஒவ்வொரு நாடும் தனது பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளை உருவாக்கின.

பங்குச் சந்தைகளை எப்படி நடத்தலாம் என்ற விதிமுறைகளை வகுத்தது அரசாங்கம். அதன்பிறகு பங்குச் சந்தைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு தனி நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டதுதான் செபி - SEBI ( Security and
Exchange Board Of India.) என்ற அமைப்பு. இதன் கண்காணிப்பில்தான் நம் நாட்டின் பங்கு சந்தைகள் இயங்குகின்றன.

இப்படி ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்கமும் தங்கள் வசதிக்கேற்ற அமைப்புகளை உருவாக்கி தங்கள் நாட்டின் சந்தைகளில் தவறுகள் நடக்காத வாறு கண்காணித்து வருகின்றன.

அரசாங்கம் சார்ந்த இந்தக் கண்காணிப்பு அமைப்புகளால் பொதுமக்களுக்கு என்ன பயன்-

பங்கு வர்த்தகத்தின் செயல்பாடுகளை அரசாங்கம் சார்ந்த அமைப்புகள் கண்காணிக்கும் போது அங்கு தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள முடிகிறது. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற நடைமுறை இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் வந்த பிறகு தான் செயல்வடிவம் பெற்றது.

ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுடைய நிறுவனத்தைப்பற்றி சொல்வது அனைத்தும் எக்ஸ்சேன்ஜில் இருக்கும்.  அவங்களுடைய இணையப் பக்கத்தைத் திறந்து பார்த்தால்
அதில் நிறுவனங்களின்ஆண்டறிக்கையை (Annual Report)  நாம இலவசமாகவே படித்துப் பார்க்க முடியும். அதனால பொதுமக்கள் ஒரு நிறுவனத்தைப் பற்றிய(அந்நிறுவனம் லாபத்தில் நடக்கிறதா அல்லது நஷ்டத்தில் நடக்கிறதா) உண்மை நிலையை நன்கு அறிந்து கொள்ளமுடியும். இதன்மூலம் மக்கள் நம்பிக்கையான நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்ய முடியும்.



பங்கு வர்த்தகம் பற்றிய கண்காணிப்பு அமைப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அங்கு தவறுகள் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. அவ்வபோது சிற்சில இடங்களில் தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனைகளும் கடுமையாக இருக்கின்றன.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழக்கம் நம்மில் தற்பொழுது அதிகரித்து வருகிறது. எனவே, பங்குசந்தையில் முதலீடு செய்யும்முன்  அது பற்றிய சாதக, பாதகங்ளைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பது நமக்கு நஷ்டம் வராமல் காக்கும்.

No comments:

Post a Comment