உங்கள் அதிர்ஷ்ட நேரம்

Thursday, July 1, 2010

பங்கு என்றால் என்ன?

ஒவ்வொரு நாளும் பங்கு சந்தை பற்றி நம் செவிகளில் விழும் செய்திகள் ஏராளம். 
அவற்றைப் பற்றி நம் மனத்தில் எழும் சந்தேகங்களும் தாரளம். 


BSE., NSE.,Sensex, Nifty, Share,  இவ்வாறு பல அர்த்தம் புரியாத வர்த்தைகளை நாம் செய்திகளில் கேட்டிருக்கலாம். அவை என்ன? எவற்றைக் குறிக்கிறது?  இது போன்ற கேள்விகள் நம் மனதில் எழுவது சகஜம். 


அண்மைய காலத்தில் பங்குச் சந்தை பற்றிய ஆர்வம் பலரிடம் எழுந்திருக்கிறது. 


ஆனால்நம்மில் எத்தனை பேர் பங்கு வர்த்தகம் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோம்? 


எப்படியாவது இந்தப் பங்குகள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு உண்டு. ஆனால் எங்கு? எப்படித் தெரிந்து கொள்வது.


வாருங்கள்,  உங்களை போன்ற புதியவர்களுக்காகவே இந்த பக்கங்கள் - பங்கு சந்தையைப் பற்றி சுலபமாக நீங்கள் புரிந்து கொள்ள என்னால் ஆன ஒரு சிறிய முயற்சி.


பங்கு வர்த்தகம் - ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய உறுதுணையாக இருக்கும் முக்கியக் காரணி. 


அதன் நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மில்லியன் 
கணக்கில் சம்பாதிக்க இயலும். அது பற்றி முறையாகத் தெரியாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் கையில் உள்ளதையும் இழந்து கடுமையான பாதிப்புகளை அடையநேரும்


ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அகலக்கால் வைக்காமல் சிறிதாகத் தான் தொடங்குவோம். நம்முடைய தயாரிப்புகளுக்கு அல்லது பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு வரும் போது உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் அவசியம். அதற்காக நாம் 
முதலில் நாடுவது வங்கிகளை. அவர்கள் நம்முடைய வரவு, செலவுகளைப் பார்த்து ஓரளவு கடன் தருவார்கள். அதைத் தாண்டியும் பணத்தேவை ஏற்படும்போது... 


அப்பொழுது நாம் பணத்தை மற்றவர்களிடம் இருந்து வாங்கியாகவேண்டும். அதைக் கடனாக வாங்கினால் அதிக வட்டி கொடுக்க வேண்டிவரும். அதற்குபதிலா நாங்க லாபத்தில் பங்கு கொடுக்கிறோம் என்ற உத்தரவாதம் தந்தால், அதுதான் ஷேர் அல்லது பங்கு. 


நான் லாபத்தில் உங்களுக்குப் பங்கு கொடுக்கிறேன். நீங்களெல்லாம் பங்கு கொடுங்க அப்படின்னு பொதுமக்களிடம் நேராகக் கேட்பது. பொது மக்களிடம் இருந்து பணத்தை வாங்கி அந்தப் பணத்தை வைச்சு நிறுவனத்தை அல்லது வர்த்தகத்தை விரிவு பண்ணி மொத்த லாபம் என்ன வருதோ அதை 
முதலீட்டாளர்களுக்குப் பிரிச்சுக் கொடுக்கிறது தான் பங்கு (SHARE)  எனப்படும்.


ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கோ அதிக முதலீடு தேவைப்படலாம். அதற்கான நிதியைத் திரட்டட பொதுமக்களுக்குப் பங்குகள் விற்கப்படுகின்றன. நிறுவனம் ஈட்டும் இலாபம் முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன.


ஆக பங்கு என்றால் என்ன என்பது புரிந்து விட்டது.  

No comments:

Post a Comment